Monthly Archives: December 2019

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 259

259. தைஜஸாத்மிகா ( तैजसात्मिका – கனவு நிலை ஜீவனான தைஜஸனின் ஆத்மாவுடைய ஒளியாக இருப்பவள் ) கனவு நிலையில் இருக்கும் ஜீவனை தைஜஸன் என்பர். அந்த தைஜஸனின் ஆத்ம ஒளியாக அன்னை இருக்கிறாள் என்கிறது இந்த நாமம். விழித்திருக்கும் நிலையில் மனது எண்ண அலைகளால் மோதப்பட்டு நிலையின்றி இருக்கும். அது கனவு நிலைக்கு நகரும்போது, … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 258

258. ஸ்வபந்தீ ( स्वपन्ती – ஸ்வப்ன/கனவு அவஸ்தையில் இருக்கும் ஜீவனோடு பேதமில்லாதாள் ) மேலே சொன்ன விழிப்பு நிலையில் சீவன் தூல, சூக்கும, காரண உடல்கள் வழியாக செயல்கள் செய்கிறான். ஆனால் கனவு நிலையில் தூல சரீரம் இயங்குவதில்லை. தூல உடலோடு இயங்கும்போது,இயக்கத்தோடு தொடர்புடைய புற உலகும், பிற சீவர்களும் இந்த சீவனல்லாதவை. இதிலிருந்து … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 257

257. ஜாகரிணீ ( जागरिणी – ஜாகர/விழிப்பு அவஸ்தையில் இருக்கும் ஜீவனோடு பேதமில்லாதாள்) அவஸ்தைகளாம் ஐந்தில் ஜாகரம் என்பது விழிப்பு நிலை; மற்றவை ஸ்வப்னம், சுஷீப்தி, துரியம், துரியாதீதம். விழிப்பு நிலையா, ஜாகரத்திலிருக்க, சீவன் தன்னுடைய தூல உடலைப் பயன்படுத்துகிறது. உடலே கருவியாக, புற உலகின் தொடர்பும் ஏற்படும். அதன் வழியாக தருமம், அதருமம், புண்ணியம், … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 256

256. விஶ்வரூபா ( विश्वरुपा – விஸ்வம் எனப்படும் அகிலாண்ட வடிவினள் ) இதற்கான பாஸ்கரராயர் உரையை ஒட்டிய கணேசய்யர் உரை மிகவும் விரிவானது. மிகவும் சுருங்கச் சொல்லவேண்டுமானால், பரப்ரம்ஹமானது, ப்ரபஞ்சத்தின் அனைத்து சராசரங்களிலும் இருப்பதால், அவற்றின், உருவாகவே இருக்கிறாளென்று உணர்த்தும் நாமம் இது. அண்டாண்டமே விஸ்வமெனப்படுகிறது. அதிலே வியாபித்திருக்கும் விவரிக்க இயலா வடிவினளே விஸ்வரூபா. … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 255

255. தர்மாதர்ம விவர்ஜிதா ( धर्माधर्मविवर्जिता – தர்மம், அதர்மம் என்னும் குணபேதங்களோடு தொடர்பில்லாதாள் ) பிரபஞ்சத்தில் உள்ள அத்துணை சராசர வஸ்துக்களுக்கும் அவற்றுக்குண்டான ஸ்வதர்மம் உண்டு. நெருப்பின் தருமம் எரிப்பது, நீரின் தருமம் நனைப்பது; சிற்றுயிர்கள், தம்முடைய தருமத்திலிருந்துத் தவறுவதில்லை. சிந்தனை சக்தியுடைய உயிர்கள், கர்மத்தால் கட்டுண்டவை. ஆனால் அவை ப்ரபஞ்ச மாயையில் சிக்கி, … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 254

254. த்யான-த்யாத்ரு-த்யேய ரூபா ( ध्यानध्यातृध्येयरूपा – தியானம், தியானிப்பவர், தியானம் செய்யப்படும் வஸ்து என்ற மூன்றாகவும் இருப்பவள் ) தியானம் என்பது மனதில் ஏற்படும் ஞானத்தைக் குறிப்பதால், இந்த த்ரிபுடியாம் த்யான-த்யாத்ரு-த்யேய, ஞான, ஞாத்ரு, ஞேய என்ற மூன்றின் உருவாகவும் இருக்கிறது. இடையறாது பரவஸ்துவிடம் சிந்தனை இருப்பதே தியானம் ஆகும். பரத்தோடு ஒன்றுபட செய்யும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 253

253. விக்ஞான கனரூபிணி ( विज्ञानघनरूपिणी – திரண்டப் பேரறிவினள் ) புற உலகின் இயக்க நிலை உண்மைகளை, அவை ஐம்பூதங்களின் பரிணாமங்களாய், பரிமாணங்களாய் இருப்பதை ஐம்புலனறிவினால் அறிகிறோம். இதுவே ப்ரபஞ்ச ஞானம்; இதைப் புறந்தள்ளி ஆத்மா தன்னில் தானாய் இருப்பதை பேரறிவாய் (விக்ஞானம்) என்று வேதங்களும், அவற்றை நமக்களித்த ரிஷிகள் கூறி வந்திருக்கின்றனர். குவிக்கண்ணாடியின் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 252

252. பரமானந்தா ( परमानन्दा – பேரின்ப வடிவானவள் ) பிறக்கும் ஜீவன்கள் எல்லோரிடத்தும் ஆனந்தம் இயற்கையிலிருக்கிறது. வாழும் நாட்களில், புறப்பொருட்கள் மேல் நாட்டத்தால் அந்த ஆனந்தத்தைத் தொலைத்துவிட்டு, துன்பத்தில் உழலுவதும், புறப்பொருட்கள் தங்களுக்குக் கிட்டாமல் வருந்தடைகளை ஆனந்தத்திற்கு எதிரானத் தடைகளாகக் கற்பனை செய்துகொண்டு வருந்துவதும் நடக்கிறது. வருத்தம், ஆனந்தத்தின் எதிர்மறையாகும். இதுபோன்ற சிற்றின்பங்களின் தொகுப்புகளைத் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 251

251.சின்மயீ ( चिन्मयी – பேரறிவே வடிவானவள் ) சித் மயம் என்பதே சின்மயீ. சித் என்றால் பேரறிவு அல்லது பரத்தைப் பற்றிய உணர்வொடு கூடிய ஞானம், ஐம்புலன்கள் உணரும் ஜடப்பொருட்களுக்கு அவற்றைப் பற்றிய உணர்வு இல்லை. ஆனால் அவற்றினை உணரும் ஜீவர்களுக்கு அந்த உணருமறிவு உண்டு. இதுவே ஆத்ம தத்துவம். அந்த பேரறிவின் வடிவாகவே … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

கற்பக அந்தாதி

எப்போதோ எழுதிய கற்பக அந்தாதி வெண்பா! எடுத்துப்பார்க்கையில் எத்தனையோ பிழைகள். மோனைத் தொடை முற்றிலும் தொலைந்திருந்தது..! அந்தாதியில் உள்ள விதிப்படியே முதற்பாட்டின் முதற் சீர்/சொல்/எழுத்து இறுதிப் பாடலில் இறுதி சீர்/சொல்/எழுத்தாக வந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. இதுபோன்ற பிழைகளையெல்லாம், செப்பமிட்டு மீண்டும் பதிவு செய்திருக்கிறேன். பி.கு: காப்புச் செய்யுள் அந்தாதிக்குள் அடங்காது காப்புச் செய்யுள்: ஓங்குபுகழ் மாமயிலை … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | 2 Comments