Category Archives: Songs (பாடல்கள்)

தெய்வத்தின் குரல் இங்கே கேட்குது…

இராகம்: நீலமணி – தாளம்: ஆதி பல்லவி: தெய்வத்தின் குரல் இங்கே கேட்குது – அருள் செய்கின்ற பார்வையாலே பார்க்குது – தினமும் (தெய்வத்தின்) அனுபல்லவி: வையமெல்லாம் வியக்கும் மெய்யவதாரமாய் பெய்கருணை மழையாய் பொழிந்தருள் புரியும் (தெய்வத்தின்) சரணம்: கைகளில் தண்டமும் கண்களில் கனிவும் – அத் வைதநெறி காட்டும் அருளென வாக்கும் வெய்யிலாம் வாழ்விலே … Continue reading

Posted in Music (இசை), Songs (பாடல்கள்) | Leave a comment

இன்னுமொரு காவடிச் சிந்து…

செஞ்சுருட்டி – ஆதி வேலவன்  முருகன் அருள் மாலவன் மருகன் வீர பாலகன் குமரன் தமிழ் வாலனுள் மருவும் வெற்றி வேலவன் – வேதம் நாலவன் – சீல நூலவன் – ஊன்றும்கோலவன் உள்ளமதைக் கொள்ளையிடும் உன்னதநற் சீலனவன் தெள்ளுதமிழ் நாட்டினரின் தெய்வமந்த வேலனவன் அள்ளுமழ கத்தனைக்கும் அந்தமின்றி சொந்தனவன் உள்ளுநெஞ்சிற் ஓங்கிநின்று ஒட்டிக்கொள்ளும் பந்தமவன் வேலவன் … Continue reading

Posted in Music (இசை), Poems (கவிதைகள்), Songs (பாடல்கள்) | Leave a comment

ஆறுபடை வீடமர்ந்த – காவடிச் சிந்து..

அண்ணாமலை ரெட்டியாரின் அழகான காவடிச் சிந்தான “அழகு தெய்வமாக வந்து” எனக்கு ஊந்தூக்கியாக இருந்து கீழுள்ள காவடிச் சிந்தினை எழுத வைத்தது, இரண்டு நாளைக்கு முன்பு.. கவியன்பர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்குமே இது அர்ப்பணம்! இது.. ஆறுபடை வந்தமர்ந்த ஆறுமுக வேலவனாம்  ஆறுதலை தந்தளிக்கும் நாதன் – அவன்  அழகுவள்ளி தேவயானை காந்தன் – உமை அரனார்மகன் … Continue reading

Posted in Music (இசை), Poems (கவிதைகள்), Songs (பாடல்கள்) | Leave a comment

ஆனைமுகனை அரவாபரணன் மகனை

இராகம்: கௌளை           தாளம்: ஆதி (¾ தள்ளி) பல்லவி: ஆனைமுகனை அரவாபரணன் மகனை ஆண்டருள் விநாயகனை அனுதினமவன் அருள்பெறநினை அனுபல்லவி வானைக் கடலையிவ் வையமுங் கடந்துநிறைந் தோனை தேவர்களில் மூத்தோனை முழுமுதல்தேவனை சரணம்: பானைவயிறாயினும் பக்தர்க்குப் பரிந்தோடு வானை மூவர்க்கும் மேலாம் கோனை முந்துதமிழ் தேனை தெளிவை என்றும் தெவிட்டா அமுதாகு(ம்) வானை … Continue reading

Posted in Music (இசை), Songs (பாடல்கள்) | Leave a comment

சிவனந்தாதி – ஒரு முயற்சி

காலை நேரத்திலே கண்விழித்தால் கவிதைதான் தோன்றுகிறது. இன்று ஒரு அந்தாதி எழுதவேண்டும் என்கிற ஒரு அவா..30 நிமிடத்தில் 11 பாக்கள் பூத்தன. எல்லாம் ஈசனைப் பாடி!  நண்பர், கவிஞர் இராஜ.தியாகராஜன் அவர்களின் அந்தாதியைப் படித்ததில் வந்த ஊக்கம்.. அவருக்கு என் நன்றி. நேரம் கிடைக்கும்போது இதற்கு காப்புச் செய்யுளும் செய்வேன்.. முடிந்தால் 50 பாக்கள் வரை … Continue reading

Posted in Poems (கவிதைகள்), Songs (பாடல்கள்) | Leave a comment

ப்ருந்தாவனம் கண்டேன்…

காஞ்சிப் பெரியவாளின் ப்ருந்தாவன தரிசனம் பற்றி எழுதிய பாடல். ராகம்: ப்ருந்தாவன ஸாரங்கா ப்ருந்தாவனம் கண்டேன் – அழகிய ப்ருந்தாவனம் கண்டேன் – காஞ்சியில் ப்ருந்தாவனம் கண்டேன் – பெரியவா ப்ருந்தாவனம் கண்டேன் – காமகோடி ஆச்சார்யாள் நித்ய வாஸம் செய்யும் ஆச்சார்யாள் நித்ய வாஸம் செய்தருளும் – (ப்ருந்தாவனம்) பக்தருக்கெல்லாம் அவர் பெரியவா – … Continue reading

Posted in Music (இசை), Poems (கவிதைகள்), Songs (பாடல்கள்) | Leave a comment