590. கடாக்ஷ கிங்கரீ பூத கமலாகோடி ஸேவிதா ( कटाक्षकिङ्करीभुतकमलाकोटिसेविता – கடைவிழிப் பார்வையால் இட்ட ஏவல்களை நிறைவேற்றும் கோடிக்கணக்கான லக்ஷ்மீ தேவியரால் வணங்கப்பட்டவள் )
தேவியின் கடைவிழிக் கட்டளைக்குக் காத்திருக்கும் கிங்கரிகளாக (வேலை செய்யும் பெண்மணிகளாக) கோடிக்கணக்கான லக்ஷ்மி தேவியர் காத்திருப்பராம். தேவி எந்த அடியார்களின் மேல் தம் கடைக்கண்களை வைக்கிறாளோ, அவர்களுக்கு லக்ஷ்மீ சென்று பணிபுரிவாள். கோடிக்கணக்கான லக்ஷ்மீ தேவியர் என்றது, எவ்வளவு செல்வமிருந்தாலும், எல்லாமே அன்னையின் கடைக்கண்களின் கட்டளைகளுக்குக். காத்திருந்து குற்றேவல் செய்யவே காத்திருக்கவேண்டும் என்பதை உணர்த்த!
கண்கடையால் அன்னையிட்ட கட்டளைகள் ஆற்றுவர்
எண்ணரும் மால்மனையர் ஏவலென்று – கண்பார்த்துத்
தண்ணுளத்தால் தாயருளின் தாமம் பொழிந்துவிட்டால்
அண்ணிப்பன் பர்க்காகும் ஆம்
அண்ணிப்பு – இனிமை; தண்ணுளம்–குளிர்ந்தவுள்ளம்;